அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷவே இன்னமும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி திரந்த வலலியெத்த தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
இணைய சேனலுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.