Thursday, May 2, 2024

Latest Posts

22 ஆவது திருத்தம் சர்வதேசத்திற்கு வழங்கும் நேர்மையான சமிக்ஞை – சஜித்

69 இலட்சம் ஜனாதிபதி ஆணையும், 68 இலட்சம் பொதுத் தேர்தல் ஆணையும் கருத்திற்கொள்ளப்படாது தன்னிச்சையான அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டு கடுமையான முடிவுகளை எடுத்ததன் மூலம் ஒரு மக்கள் போராட்டம் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக, ஏழு மூளை இருப்பதாகச் சொன்ன நிதி அமைச்சரும், பெரும்மன்னர் என சொன்ன பிரதமரும், ஏதோச்சதிகார ஜனாதிபதியும் அவர்களது அடிமைக் கூட்டமும் ஓடிச் சென்றதாகவும், அதன் காரணமாகவே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பேசுபொருளாகி முன் வந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், 22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த பிரஜைகளுக்குமே வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

225 பேருக்கு வரப்பிரசாதங்கள், சலுகைகள் வழங்கப்படுவது போலவே 225 இலட்சம் மக்களுக்கும் வரப்பிரசாதங்கள்,சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

22 ஆவது திருத்தம் என்பது முழுமையான அரசியலமைப்புத் திருத்தம் இல்லையென்றாலும், அதன் முக்கிய காரணிகள் மீதான நம்பிக்கையினாலும், நாடு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு, சர்வதேச சமூகத்திற்கு இது சாதகமானதொரு நேர்மையான சமிஞ்சையைக் கொடுக்கும் என்ற உணர்வினாலும், மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டும் தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு ஆதரவளிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.