உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டப்ளியூ எம்.ஆர் விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.துரை ராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர், தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...