தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை வழங்க தீர்மானம்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான அடிப்படை சம்பளம் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வரவு வைக்கப்படும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

புத்தாண்டு பிறப்பதால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...