பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

உயர்தர விடைத்தாள்களின் மதிப்பீட்டை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.

இதுவரை 2 பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

ஏனைய 6 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 10 நிலையங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீடுகள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...