ஊவா – கிழக்கு இணைந்த அபிவிருத்தி – இரு மாகாண ஆளுநர்கள் இடையே முக்கிய சந்திப்பு

Date:

ஊவா மற்றும் கிழக்கு இணைந்த அபிவிருத்தி குறித்து இரு மாகாண ஆளுநர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலை சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவாவை அண்மித்த மாகாணங்களின் எல்லைப் பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலுக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு ஊவா மாகாண ஆளுனர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...