யாழில் வன்முறை, 31 பேர் கைது

Date:

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி, நீர்வேலி பகுதியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 பெண்களும் 06 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி – நீர்வேலியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த சிலர், அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்திய போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான ஏனைய இருவர் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்...

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...