காதல் மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர் ட்ரூடோ !

Date:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா 18 ஆண்டு திருமண வாழ்வின் பின் தனது மனைவி சொபியாவை பிரிந்துள்ளார். அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“அன்பு மற்றும் மதிப்புடன் நெருக்கமான குடும்பம் ஒன்றாக” தொடர்ந்தும் தாம் இருக்கப்போவதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பிரதமர் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று 51 வயதான ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

2015இல் ட்ரூடோ பிரதமரான பின்னர் அவரும் மனைவியும் பல நிகழ்வுகளில் காணப்பட்டனர். எனினும் சமீபகாலமாக இருவரையும் ஒன்றாக பொதுநிகழ்வுகளில் காணமுடியவில்லை என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...