தயாசிறியை அடுத்து திலங்க

Date:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திலங்க சுமதிபால ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக நின்று அதற்கு எதிராக தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து செயற்பட்டவர்.

இதன் காரணமாக, தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் செயலாளர் நாயகம் மஹிந்த அமரவீரவினால் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, திலங்கவை நீக்கி மீண்டும் அமரவீரவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலங்கா கட்சித் தரப்பிலிருந்து கட்சித் தலைவருக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகக் கேட்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...