மீண்டும் ஒரு சீனி இறக்குமதி மோசடி?

Date:

இறக்குமதி செய்யப்படும் சீனியின் ஒரு கிலோவிற்கு 25 சதம் இறக்குமதி வரி நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபாவிலிருந்து 300-325 ரூபாவாக அதிகரிக்குமெனவும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சீனி வரி அதிகரிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பிரதான சீனி இறக்குமதியாளர் 8000 மெட்ரிக் தொன் சீனியை 25 சத வரிக்கு இறக்குமதி செய்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 2020இல் சீனி இறக்குமதி வரியை ஐம்பது ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அப்போதைய அரசாங்கம் குறைத்தது.

இதனால் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத்திற்கு 10,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு பயணம் செய்யும் மக்களுக்காக சிறப்பு போக்குவரத்து சேவைகளை...

இலங்கையில் பாரிய வங்கிக் கொள்ளை!

(NDB) தேசிய அபிவிருத்தி வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி உள்ளக...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...