மீண்டும் ஒரு சீனி இறக்குமதி மோசடி?

Date:

இறக்குமதி செய்யப்படும் சீனியின் ஒரு கிலோவிற்கு 25 சதம் இறக்குமதி வரி நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபாவிலிருந்து 300-325 ரூபாவாக அதிகரிக்குமெனவும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சீனி வரி அதிகரிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பிரதான சீனி இறக்குமதியாளர் 8000 மெட்ரிக் தொன் சீனியை 25 சத வரிக்கு இறக்குமதி செய்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 2020இல் சீனி இறக்குமதி வரியை ஐம்பது ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அப்போதைய அரசாங்கம் குறைத்தது.

இதனால் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத்திற்கு 10,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...