எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் – ரொஷான் ரணசிங்க

Date:

தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனது பாதுகாப்பு குறித்து ஆராயுமாறும் சபாநாயகரிடம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய அவர், ஷம்மி சில்வா உள்ளிட்டவர்கள் அண்மையில் செய்தியாளர் சந்திப்பின் போது தமக்கு எதிராக அச்சுறுத்தும்விதத்தில் பேசியிருந்தாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தனது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் சபாநாயகரரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...