இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து முல்லையில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுப்பு!

Date:

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண கடைப்பிறப்பில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு சென்று மீனவர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கதைப்பதில்லை எனவும் இதன் போது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் முல்லைத்தீவு மீனவர்களுடன் யாழ் மாவட்ட மீனவர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் நிறைவின்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி மற்றும் கடல் தொழில் அமைச்சர் ஆகியோருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகதாம் அறிந்துள்ளதாகவும் இருந்த தொடர்பாக உரிய தரப்புகளுக்கு தெரியப்படுத்துவதாகவும் இந்த மகஜர்களை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் இப்போராட்டத்தில் சுமார் 70 வரையிலான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...