5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கம்

0
173

மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் அத்தியாவசியமானோரை மாத்திரம் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபை மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அடுத்த வருடம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட 25 வீத சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here