ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகூடத்தில் சிக்கியவை

Date:

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ மற்றும் ‘எச்’ அறைகளில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35 சிம் அட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் மெகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் (02) இரவு இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம்கார்டுகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...