தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் கைது

Date:

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். பல்வேறு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு எல்லை தாண்டியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். காலை 9 மணிக்கு தமிழக மீனவர்கள் அந்த முகாமில் அடைத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, வந்த கடற்படை அதிகாரிகள், எல்லை மீறி நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் வலைகளை அங்கேயே அறுத்ததாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...