நீதிமன்றில் அமைச்சர் ஹரீன் விடுத்த அறிவிப்பு

Date:

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு இடைக்கால நிர்வாக குழுவொன்றை நியமித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தப் போவதில்லை என புதிய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனு தொடருமா? இல்லையா? என்பதை எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட நவம்பர் 05, 2023 திகதியிட்ட 2356/43 என்ற அதிவிசேட வர்த்தமானியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்து விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...