பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கின்றேன்: மனோவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

0
234

வீடு வீடாக விபரங்களைத் திரட்டும் பொலிஸாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கின்றேன் என இது விடயமாக தன்னைச் சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. தனது அதிகாரபூர்வ எக்ஸ் – ருவிட்டர் தளத்தில், “இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்தப் பொலிஸ் பதிவு படிவங்களை நிராகரிக்கும்படி மக்களைக் கோருகின்றேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here