சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிடியில் இருந்த இலங்கை அரசு மீனவர்கள் மீட்பு

Date:

சோமாலிய ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

ஆயுததாரிகள் குழுவின் மூவர் Seychelles பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

‘Lorenzo Putha 4’ என்ற இந்த மீன்பிடிப் படகு கடந்த 12 ஆம் திகதி திக்கோவிட்ட பகுதியில் இருந்து தனது முதலாவது கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதில் சிலாபம் மாரவில பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களே கடற்றொழிலுக்கு சென்றிருந்தனர்.

அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...