சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிடியில் இருந்த இலங்கை அரசு மீனவர்கள் மீட்பு

Date:

சோமாலிய ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

ஆயுததாரிகள் குழுவின் மூவர் Seychelles பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

‘Lorenzo Putha 4’ என்ற இந்த மீன்பிடிப் படகு கடந்த 12 ஆம் திகதி திக்கோவிட்ட பகுதியில் இருந்து தனது முதலாவது கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதில் சிலாபம் மாரவில பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களே கடற்றொழிலுக்கு சென்றிருந்தனர்.

அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...