முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.01.2024

Date:

1. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டிற்கான சரக்கு ஏற்றுமதிகள் 9.5% அதிர்ச்சியூட்டும் வகையில் சரிந்தன. 2022 ஆம் ஆண்டில் 13.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 ஆம் ஆண்டில் வெறும் 11.9 பில்லியன் அமெரிக்க டொலராக சரிந்தது.

2. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு அருகாமையில் இன்று பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார். பொருளாதார நீதிக்கான தங்களின் கோரிக்கைக்கு அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறுகிறார்.

3. சில பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் டொக்டர் சுரேன் ராகவன் கூறுகிறார். பல்கலைக் கழகங்களில் இத்தகைய “அரசியலாக்கம்” நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவே உள்ளன என்று வலியுறுத்துகிறார்.

4. மனித உரிமைகள் கண்காணிப்பகம், போர்க்கால துஷ்பிரயோகங்களை விசாரிக்க மற்றொரு அமைப்பை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சட்டம் முந்தைய தோல்வியுற்ற முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணிக்கிறது மற்றும் இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் குறைவு என்று கூறுகிறது. ஆயுத மோதல்கள் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அவர்களது சமூகங்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து மௌனப்படுத்தி ஒடுக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

5. பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக SLPP பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

6. அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவைப்படகு 6 பணியாளர்களுடன் சீஷெல்ஸ் கடலோரக் காவல்படை மீட்டுள்ளது. 3 கடற்கொள்ளையர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இழுவை படகை சீஷெல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

7. புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வடக்கின் பிரதான தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனது முதல் உரையாடலை நடத்தினார். “அரசியல் தீர்விற்கான அவர்களின் கூட்டுக் கோரிக்கையில் வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் ‘ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை’ கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

8. அதிகம் வெளியிடப்பட்ட & சின்னமான க்ரிஷ் டவர் அல்லது கொழும்பு கோட்டையில் உள்ள “தி ஒன் டவர்” ஒரு பெரிய பேரழிவை நோக்கி செல்கிறது. செயலற்ற கட்டுமான தளம் இப்போது 50 தளங்களை எட்டியுள்ளது மற்றும் கூரையின் மேல் உள்ள கிரேன் ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. கிரேன் விபத்துக்குள்ளாகலாம் என பார்வையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் கொழும்பு கோட்டை வீதி மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பரபரப்பான போக்குவரத்திற்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

9. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதக் குழு தேசிய மக்கள் சக்தியின் (NPP) கூட்டாளிகள் என்று UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி வேட்பாளரைத் ஆதரிக்கும் SLPP அதிருப்தி எம்பி நிமல் லான்சா கூறுகிறார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபரான ‘இப்ராஹிம்’ என்பிபி தேசிய பட்டியலில் இருந்தவர் என்றும் கூறுகிறார். இந்த பயங்கரவாத குழு NPP க்கு நிதியளித்துள்ளது என்றும் கத்தோலிக்கர்கள் வாக்களிக்கும்போது இந்த உண்மையை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

10. சந்தையில் மரக்கறி விலைகள் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. கரட் கிலோ ரூ.2,000, பச்சை மிளகாய் ரூ.1,200, கெக்கிரி ரூ.300, பூசணி ரூ.300 என வருந்துகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...