அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் விபத்து

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 01.00 மணியளவில் புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 15 ஆம் மைல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் உழவு இயந்திரத்தை செலுத்திய நபர் காயமடைந்துள்ளார்.

புளியங்குளம், அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், இந்த எம்.பி பயணித்த கார் மோதியதில் ஒருவர் இறந்தார். இது பாலாவியா – கல்பிட்டி வீதியில் மாம்புரியா பகுதியில் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...