தமிழ் பொதுவேட்பாளர் யோசனை:அடியோடு நிராகரித்தார் சம்பந்தன்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. அடியோடு நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்குத் தமிழ் மக்களிடத்தில் ஆதரவு கிடையாது.

இந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்காது.” – என்றார்.

எனினும், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்துக்குச் சில தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி இது தொடர்பில் எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது. சம்பந்தனின் நிலைப்பாடும் இதனையே பிரதிபலிக்கின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...