மலேசிய இந்திய காங்கிரஸுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராட்டு

Date:

வெளிநாட்டு வாழ் இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டு தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உட்பட அந்நாட்டின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் அழைப்பில் அங்கு சென்ற ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய மக்களுக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் வழங்கும் சேவையினால் மிகவும் கவரப்பட்டதாக கூறியுள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ விக்னேஷரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  சரவணன் முருகன் எம்.பி மற்றும் பிற அரசியல் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்காக பாராட்டுளையும் தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் தலைவர் தமது சாதனை புத்தகத்தையும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இதன்போது  வழங்கி வைத்தார்.

வெளிநாட்டு வாழ் மலேசிய இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பான சேவைகளை தொடர தமது வாழ்த்துகளை ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...