ஊடகவியலாளர் நிலக்சனின்17ஆம் ஆண்டு நினைவேந்தல்

Date:

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கைக் மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்ட முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுததாரிகள், நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் முன்னிலையில் சுட்டுப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...