அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

0
200

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்.

இதன்படி, குறைந்த தரங்களுக்கு 24% ஆகவும், மற்ற பதவிகளுக்கு 24% முதல் 35% ஆகவும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

சம்பளத்தை அதிகரிக்கும் போது தகுதி, அனுபவம் மற்றும் அவர் தற்போது செய்து வரும் பணி குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக 25000 வரை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here