வடக்கு கிழக்கு தொடர்பான நாமலின் உறுதியான நிலைப்பாடு

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கப் போவதில்லை என நாமல் ராஜபக்ஷ அநுராதபுரத்தில் தனது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

செய்யக்கூடியது சாத்தியம் என்றும், முடியாததை நேரடியாகவும் முடியாது என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வடக்கு, கிழக்கை இணைக்காது என்றும், பௌத்த நாட்டில் உள்ள அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் மக்களை பாதுகாப்பேன் என்றும் அவர் கூறினார்.

சவால்களுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...