நாடாளுமன்றத் தேர்தல் மீறல் குறித்து  இதுவரை 1,136 முறைப்பாடுகள் பதிவு- தேர்தல் ஆணைக்குழு தகவல்

0
34

நாடாளுமன்றத் தேர்தல் மீறல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 316 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 788 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும், ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here