சமஷ்டிக்குஒருபோதும்இடமளியோம் – மொட்டுக் கட்சி அறிவிப்பு  

Date:

“ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்த நாட்டில் சமஷ்டி கட்டமைப்பைக்  ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“2015 நல்லாட்சி காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்புப் பணி இறுதிப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி அநுர வழங்கியுள்ளார். இலங்கை மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் எனவும், மாகாண சபைகளுக்குரிய அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மத்திய அரசு இரத்துச்  செய்ய முடியாது.

மாகாண இணைப்புக்குரிய அதிகாரமும் மாகாண சபைக்குச் செல்லும். எல்லை நிர்ணயம்கூட மாகாண சபை வசம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. எனவே, 2015 அரசமைப்பு அமுலுக்கு வந்தால் இலங்கை சமஷ்டி நாடாக மாறும். நாடாளுமன்ற அதிகாரம் குறையும். எனவே, இதற்கு இடமளிக்கக் கூடாது.

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குப் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே, சமஷ்டி முறைமைக்கு இடமளிக்கமாட்டோம். தமிழ் டயஸ்போராக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் தயாரில்லை.

ஆட்சியாளர்கள் கள்வர்கள் எனக் கூறியே அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்னும் கள்வர்கள் பிடிபடவில்லை. இதன்மூலம் அவர்கள் கூறியவை பொய்கள் என்பது உண்மையாகியுள்ளன.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...