அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மகாவங்கி பிணை முறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (டிசம்பர் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணைகளை பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ், மற்றுமொரு வழக்கு தொடர்பில் தற்போது சிறையில் உள்ள அர்ஜூன் அலோசியஸை அடுத்த நீதிமன்ற அமர்வில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...