அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மகாவங்கி பிணை முறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (டிசம்பர் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணைகளை பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ், மற்றுமொரு வழக்கு தொடர்பில் தற்போது சிறையில் உள்ள அர்ஜூன் அலோசியஸை அடுத்த நீதிமன்ற அமர்வில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...