நாட்டு மக்களுக்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Date:

தம்மிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொது மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் முடிந்துவிடும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வந்துள்ள இரண்டு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு கப்பல்களில் உள்ள எரிபொருள் சில நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

டீசல் ஏற்றிச் செல்லும் கப்பலும், பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பலும் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த நிலையில், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், கப்பல்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டு, எரிபொருள் இறக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்தக் கப்பல்கள் 41,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் டன் பெட்ரோலைக் கொண்டு வந்துள்ளன.
அடுத்த சில நாட்களில் மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...