பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

Date:

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஜனவரி 20ஆம் திகதி இரவு அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்துள்ளதுடன் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதனையடுத்து அனுராதபுரம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கையிடப்பட்டது. 

இதற்கமைய சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விசேட பொலிஸ் குழுவினால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...