விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Date:

மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மேலாடை, LTTE அமைப்பினருடையது என தெரிவித்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – வவுணதீவிலுள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிய 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...