இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது பதவி உயர்வுகள் உட்பட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது.
இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்க செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் கூறுகிறார்.