மின் கட்டணம் அதிகரிக்காது

Date:

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மின்சார கட்டணங்களை நிலையானதாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், முந்தைய காலாண்டுகளில் மின்சாரசபையின் வருமான உபரியை நுகர்வோருக்கு வழங்க தீர்மானம் மேந்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.

அத்தோடு, வருடத்திற்கு 4 முறை கட்டணங்களை திருத்துவது தர்க்கரீதியானது அல்ல என்றும்  வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...

இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10...

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...