நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Date:

மீண்டும் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் இன்று காலை நிரம்பி வழியத் தொடங்கின.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தானியங்கி வெள்ள வாயில்கள் 6, இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 17,700 கனஅடி நீர் ரந்தெணியல நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுகிறது.

அதேபோல், ரந்தெணிகல நீர்த்தேக்கத்தின் வெள்ள வாயில்கள் 2 இன்று காலை திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 472 கன மீட்டர் நீர் கொள்ளளவு கீழ்நிலையிலுள்ள ரந்தம்பே நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளது.

ரந்தெணிகல நீர்த்தேக்கத்தின் ஒரு வெள்ள வாயில் 1 மீட்டர் உயரத்திற்கும், மற்றொரு வாயில் 2.5 மீட்டர் உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா, ரந்தெணியல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக, மினிப்பே அணை வழியாக வெளியேறும் நீர் ஓட்டத்தின் கொள்ளளவு மாறுபடக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லொக்கல் ஓயா, தியபானா ஓயா, ஹேபொல ஓயா மற்றும் உல்ஹிட்டிய நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேறும் வெள்ளநீரும், பதுளு ஓயாவின் நீரும் மீண்டும் மகாவெலி ஆற்றில் இணைவதால், ஆற்றைப் பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என இலங்கை மகாவெலி அதிகார சபையின் திகன பிரதான பொறியியல் மற்றும் நீர் செயற்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...