இலங்கை கடற் பரப்பில் ஈரானிய கப்பலுக்கு நடந்தது என்ன?

Date:

காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் ஒன்றையும், அதில் உள்ள பணியாளர்களையும் மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஆரம்பித்துள்ளன.

ஈரானிய கப்பல் ஒன்று காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக (அல்லது தரைதட்டியதாக) தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று ஏற்கனவே அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவசியமேற்படின் ஒத்துழைப்பு வழங்க இலங்கை விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காலியில் இருந்து சுமார் 20-40 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச அல்லது இலங்கை கடற்பரப்பில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகளுக்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் ஒரு வணிகக் கப்பலா அல்லது கடற்படைக் கப்பலா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...