இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை வரும் 19ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (12) பிற்பகல் உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயர்பஸ் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கபில சந்திரசேன அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர்பஸ் விமானங்களை கொள்முதல் செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.