கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும் சந்தை நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்ட பிரதானி எவான் பபஜோர்ஜியோ தெரிவித்தார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டம் தொடர்பான 5ஆம், 6ஆம் கட்ட மீளாய்வுகளில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை நேற்று கூடியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
