இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

Date:

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

கொள்கலன் கட்டணங்களில் ஐந்து சதவிகித அதிகரிப்பு, டொலரின் மதிப்பு உயர்வு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் போன்ற இதர செலவுகளையும் கருத்தில் கொள்ளும் போது, இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்த மாதம் முதல் பசிபிக் பெருங்கடலில் இருந்து கண்டம் முழுவதும் ஏற்படவிருக்கும் எல் நினோ வானிலை காரணமாக, இந்தியா உட்பட பல நாடுகள் அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என ஏனைய இறக்குமதியாளர்களும் தெரிவித்தனர். 

காலநிலை மாற்றம், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க முறையான திட்டம் தயாரிக்கப்படாவிட்டால், அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தள்ளனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...

விரக்தியில் பிரதியமைச்சர்! வெளிநாடு செல்ல முடிவு

விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று...

உண்மையை உடைத்த ஷவேந்திர சில்வா!

தமக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்தவிதமான எண்ணமும் இல்லை என இலங்கையின்...