இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே பதுக்கி வைத்திருந்த 875 கிலோ மஞ்சள் பறிமுதல்

0
180

இலங்கைக்கு இரவில்  கடத்துவதற்காக தமிழ்நாடு   மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை தமிழ்நாடு   பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமுழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு  கடத்துவதற்கு  மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலிஸாருக்கு  தகவல் கிடைத்தது. 
இதன்படி, வேதாளை தென்  கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார் துரித சோதனை நடத்தினர். அதன்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25  மூடைகளில் 875  கிலோ மஞ்சள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 மஞ்சள் மூடைகளை  பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலைத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  இது தொடர்பாக முகமது அலி ஜின்னா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  
பறிமுதல்  செய்த  மஞ்சளின்  சர்வதேச மதிப்பு ரூ.3.75 லட்சம் என தமிழ்நாடு  போலீசார் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here