அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடிவு

Date:

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அரச துறை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (03) கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசு ஊழியர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியதோடு, ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

தொழில் நுட்பத் துறையினரின் அதிகளவிலான பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் திறைசேரியின் சுமையை குறைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துச் சபை மற்றும் மஹாபொல தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்பட்ட திறன்மிக்க பணியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஊழியர்கள் வழங்கக்கூடிய அரச துறைகள் தொடர்பில் தொழிற்சங்கங்களிடம் இருந்து யோசனைகளை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...