கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி தொடர்ந்து அதே பிரிவில் பணி! இரண்டு சட்டம் நடைமுறையில்..

0
83

பொலிஸ் தொலைத்தொடர்பு பிரிவில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) H.O.S. விதானகே போலியான ஆங்கில டிப்ளோமா சான்றிதழை நேர்காணலுக்காக முன்வைத்து பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளியில் வந்த அவர், எந்தவித தடைகளும் இன்றி வழக்கம்போல் தனது பணிகளைச் செய்கிறார்.

மேற்கண்ட நிலை வேறொரு கீழ்நிலை அதிகாரிக்கு ஏற்பட்டிருந்தால் இந்நேரம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்.

ஒரே துறையில் ஏன் இரண்டு சட்டங்கள் செயல்படுகின்றன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here