50 மில்லியன் தனிப்பட்ட பணத்தை மாதாந்திரம் செலவிடும் அமைச்சர் தம்மிக்க பெரேரா

Date:

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தாம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து மாதாந்தம் 50 மில்லியன் ரூபாவை அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக ஒதுக்கியதாக கூறுகிறார்.

“ஒரு விஷயம் இருக்கு, விலை மனு கோரி வேலை செய்தால் அதிக நாளாகும். அதனால்தான் எனது தனிப்பட்ட பணத்தில் மாதம் 50 மில்லியன் ரூபாவை முதலீடு செய்வேன் என்று கருதி நான் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

அதனால் அந்த மாதிரியான பணத்தை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அப்படியொரு பட்ஜெட்டை எனக்காக ஒதுக்கிவிட்டு இந்த நாற்காலியில் அமர்ந்தேன். அரசுப் பணத்தின் மீது நம்பிக்கை வைத்து அல்ல. ஒரு மாதத்திற்கு 50 மில்லியன் எனது தனிப்பட்ட சொத்துக்களை மக்களுக்காக செலவிடுகிறேன். தம்மிக்க பெரேரா டெண்டர் கேட்டு மூன்று மாதங்கள் காத்திருக்கக்கூடியவர் இல்லை.

எனவே நான் எல்லாவற்றையும் தயார் செய்து இந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தம்மிக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...