மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து வெளியான அறிவிப்பு

Date:

புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாங்கள் வேண்டாம் என்று கூறும்போது மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் தவறான சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் அதில் பல புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சட்டமூலம் தவறான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...