வெள்ளவத்தையில் இன்று திடீர் பரபரப்பை ஏற்படுத்திய உலகப் பிரபலம்! – வீடியோ

Date:

கொழும்பு- வெள்ளவத்தை சின்சபா வீதியில் இன்று பிற்பகல் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

அந்த வீதியில் திடீரென ஆயுதம் தாங்கிய பொலிஸார் வாகனங்களுடன் குவிக்கப்பட்டனர்.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

யுக்திய திட்டத்தின் கீழ் ஏதேனும் அவசர தேடுதல் நடத்தப்பட போகிறதா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கப்போகிறதா என்ற அச்சத்தில் பிரதேச மக்கள் இருந்தனர்.

இந்நிலையில் அந்த வீதிக்கு சொகுசு வாகன தொடரணி ஒன்று வந்தது. சொகுசு வாகனத்தில் பிரித்தானிய கொடி காணப்பட்டது.

வாகனத்தில் இருந்து ஒரு பிரபலம் பலத்த பாதுகாப்புடன் வெளியே வந்த பின்னரே அது பிரித்தானிய இளவரசி ஆன் என தெரியவந்தது.

இதனை உறுதிப்படுத்திய லங்கா நியூஸ் வெப் அலுவலக செய்தியாளர் ஏஞ்சலினா ரகுநாதன், குறித்த வீதியில் உள்ள Save The Children கொண்டு நிறுவனத்தின் 30 ஆண்டுகால சேவை பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்வில் கலந்து கொள்ளவே இளவரசி ஆன் அங்கு வருகை தந்ததாக தகவல் பெற்றார்.

நிகழ்வின் பின் இளவரசி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆனின் விஜயம் அமைந்துள்ளது.

இளவரசி ஆன் மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...