Saturday, July 27, 2024

Latest Posts

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா உறுதி

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், ஜனவரி மாதம் முதல் இத்தொகை மேலும் 7 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்ட பின்னர் 14 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் அச்சடிப்பதும், கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே உரிய தொகையை சேமிக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.