தேர்தலுக்கான பணத்தை தேடுவது கடினம் – உச்ச நீதிமன்றுக்கு திறைசேரி அறிவிப்பு

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் தேடுவது மிகவும் கடினமாகிவிட்டதாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பண முகாமைத்துவம் மிகவும் சவாலான சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் அதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணத்தை தேடுவது கடினமான பணியாக மாறியுள்ளதாகவும் அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மொத்த மாதாந்த வருமானம் 169 பில்லியன் ரூபாவாகவும், அரசாங்க ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள், உரங்கள் மற்றும் மருந்துகளுக்கான மாதாந்தச் செலவு 145 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், வட்டி கொடுப்பனவுகள், கடன் கொடுப்பனவுகள், மூலதனச் செலவுகள் உள்ளிட்ட பாரிய தொகையை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாகவும், அந்த மாதாந்தச் செலவுகள் அனைத்தையும் ஈடுகட்ட மேலும் 296 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பணத்தைச் செலவு செய்வதுடன், அரசாங்கப் பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதும் மிகவும் கடினமாகிவிட்டது என சிறிவர்தன தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...