பெலியத்த கொலை, மேலும் இருவர் கைது

Date:

பெலியத்தவில் ஐவரின் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிரிஹான முகாமில் உள்ள அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுர்துவ பிரதேசத்தில் வைத்து காலி மாகல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரும், கதுருவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஐவரும் பயணித்த டிபெண்டர் தொடர்பில் தகவல் திரட்டிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதுடன், முதலாம் சந்தேகநபரிடம் 30 மில்லிகிராம் ஹெரோயினும், இரண்டாவது சந்தேகநபரிடம் 06 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...