அருந்திக பெர்னாண்டோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கதறி அழுதார். ஆனால் பலன் இல்லை!

Date:

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமன்றி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல எத்தனோல் கடத்தல்காரரை கைதுசெய்து பிணையில் விடுவிக்க உதவியமை தொடர்பிலும் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது .

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அருந்திக பெர்னாண்டோ உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றார். அவர் அழுதுகொண்டே தனது துயரத்தை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பிரதமர் தலையிட மறுத்ததை அடுத்து அருந்திகா பதவி விலக நேரிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...