யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்

Date:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (2024.02.05) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழ மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுகோட்டை பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடளித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டில் சிவில் உடையணிந்த பொலிசார் வீதியில் வைத்து தன்னை தாக்கியதாகவும், பின்னர் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறிய அறைக்குள் வைத்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களின் முன்னர் சித்தங்கேணியை சேர்ந்த இளைஞன் ஒருவரை அடித்து கொன்ற குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலி நிலையத்தை சேர்ந்த பொலிஸார் சிலர் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...