வெயிலின் தாக்கத்தால், தக்காளிகளை குப்பையில் கொட்டும் அவலம் !

Date:

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி ஜூன் மாதத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது.

வடக்கிபாளையம், சூலக்கல், நெகமம், முத்தூர் பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை பணி செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை பல நாட்கள் தொடர்ந்து பெய்ததால், சில கிராமங்களில் செடியிலேயே பழுத்த தக்காளிகள் தரையில் விழுந்து அழுக துவங்கியது.


தற்போது மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து வழக்கத்தைவிட அதிகமானது.தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.10க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பு வழக்கத்தைவிட அதிமாவதால், விலை கட்டுபடியாகாமல் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...